--> Skip to main content

இதயவலி -IDHAYA VAZHI



இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூர்வ மருந்து !
சித்தர்களின் மூலிகையால் நோய் நீங்க இயற்கை உணவு உலகத்தில் இணைவோம்.
மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான இதயவலி, இதய அடைப்பு, இதயபலவீனம் போன்ற அத்தனை நோய்களுக்கும் எளிய மருந்து ஒன்றை அகத்தியர் தம் நூலில் தெரிவித்திருப்பதை அப்படியே அவருக்கு தெரிவித்தோம்.
மருந்து பயன்படுத்த தொடங்கிய 35 நாட்களில் நல்ல முன்னேற்றம், தொடர்ந்து இரண்டு மாதம் பயன்படுத்தி எந்த அறுவைசிகிச்சையும் செய்யாமல் முழுமையான குணம் அடைந்துள்ளார்.
இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீக்கும் மருந்து..

தேவையானபொருள்:
வெண்தாமரை இலை – 4 பங்கு
 ஆடுதிண்ணாபாளை வேர் – 1 பங்கு

 செய்முறை:
வெண் தாமரை இலையை நன்றாக நிழலில் உலர்த்திவைத்துகொண்டு அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம் வரும் நாளில் (பகல் வேளையில்) ஆடுதிண்ணாப்பாளை செடியின் முன் நன்றி கூறி அதன் வேரை எடுத்து தாமரை இலையுடன் நன்றாக இடித்து பொடித்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு 1 ஸ்பூன் தேனில் குழப்பி சாப்பிட வேண்டும்..

இதய அடைப்பு உள்ளவர்கள் மூன்று வேளையும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் இதயநோயே வராது....

உலகசுகார அமைப்பு வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் இந்தியர்களுக்குத்தான் அதிகமாக இதயபாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர், அடுத்த ஆண்டு உலகசுகாதார அமைப்பு வெளியீடும் அறிக்கையில் இதயநோய் மிகக்குறைவாக உள்ளநாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பிடித்தால் அது இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றியாக நாம் எண்ணுவோம்.

இந்த மருந்தை பதிவில் தெரியப்படுத்துவதற்கு காரணம் அவசரமாக ஒருவருக்கு இதய நோய் இருக்கும் சமயத்தில் நமக்கு இமெயில் அனுப்பி பதில் அவருக்கு கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் என்ற காரணத்தினால் இங்கு தெரியப்படுத்துகிறோம்.

நாம் கேட்டதற்கு இணங்க இம்மருந்து செய்வதற்காக இயற்கை உணவு உலக நண்பர்கள் தங்களின் உழைப்பை கொடுத்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றி.
குருநாதரின் அன்பும் ஆசியும் என்றும் உங்களுடன் இருக்கும்


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar